குறளோடு உறவாடு (24)
******************************
🍁 நீத்தார் பெருமை
🙏குறள்
" உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரணென்னும் வைப்பிற்கோர் வித்து..."
💐உரை
அங்குசம் போல் மனவலிமை கொண்டு ஐம்புலன்களையும் காக்க வல்லவன், எல்லாவற்றிற்கும் மேலாக கருதப்படும் பேரின்ப நிலத்தில் விதைப்பவன் ஆவான்.
குறளோடு உறவாடு (25)
******************************
🙏குறள்
"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலுங் கரி...."
💐உரை
ஐம்புலன்களை அடக்கியவனின் வலிமைக்கு, விரிந்த வானத்துத் தலைவனாம் இந்திரனே சாட்சியாவான்.
குறளோடு உறவாடு (26)
******************************
🙏குறள்
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்..."
💐உரை
செய்ய முடியாத அரிய செயலை மக்களுக்கு செய்பவரே பெரியர். அப்படி செய்ய முடியாமல் சாதாரண சராசரி செயலை செய்பவர் சிறியராவார்.
🙏திருவள்ளுவர்
க.இராமலிங்க ஜோதி.
குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏