ஜெ.ஜெ.நகரில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட ரவுடியை பிடிக்க வந்த போலீசை மூக்கு,கண், காதுப்பகுதியை வெட்டுய ரவுடி பாட்டில் மணி கைது....
ஜெ.ஜெ. நகரில் மது போதையில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற பாட்டில் மணி ரவுடியை பிடிக்க முயன்ற போது மது பாட்டிலை உடைத்து ஜே. ஜே நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் நந்தகோபால் மற்றும் ராயப்பன் ஆகியோரை தாக்கினான். இதில் பலத்த காயம் அடைந்த தலைமை காவலர் நந்தகோபால் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காயம் அடைந்த தலைமை காவலரை இன்று காலை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செய்தியாளர் கார்த்திக்