பிரதமரின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸில் விற்க முயற்சி:

 


பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் உள்ள அவரது தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ்.,-ல் ரூ.ஏழரை கோடிக்கு விற்பதாக விளம்பரம் வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை மர்ம நபர்கள் போட்டோ எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்., என்னும் இணையதளத்தில், ரூ. 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என, விளம்பரம் செய்யப் பட்டிருந்தது 

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். 

விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை கொண்டு, நடத்தப்பட்ட விசாரணையில், தவறான ஐடி கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், குஜராத்தில் உள்ள பிரமாண்டமான 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் ஒருவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.