"இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி!" - அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு

 





இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதிசெய்கிறார்கள்" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் 5 மாதங்களுக்கு முன்பே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு தங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விருத்தாசலத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி செய்கிறார்கள். தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம். தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும்.