பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவைதொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இழுவை ரயில், ரோப் கார் உள்ளிட்ட சேவைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ரோப் கார் சேவை, காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இருக்கும். மேலும் தரிசனத்திற்கு www.tnhrce.gov.in என்ற வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்களுக்கு மட்டுமே ரோப் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.