அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க கடந்த 11-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது.
அந்த குழுவின் பரிந்துரையின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ரூபாய் 700 கோடி ஊழல் புகார் மற்றும் முறைகேடான பணி நியமனங்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை ஆராய்வதற்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் கலையரசன் தலைமையிலான குழு சூரப்பாவிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.