25.11.2020 நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 24 , 25 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை,நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழகத்தில் நிவர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்,புதுச்சேரியின் தென்கிழக்கே 500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.நாளை பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 24 , 25 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.