தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.